வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யாவின் பாதம் அனுதினமும் தொழவே!...



1)  அய்யாவின் பாதம் அனுதினமும் தொழவே
    அவர் நாமகீதம் என்நாவில் தரவே
    என்னாளும் துதிப்பேன் என்வாழ்வை துறப்பேன்
    வரம் தருவாய் வைகுண்டா நல்வழி தருவாய் வைகுண்டா

2)  உம்மோடு வாழும் ஒருவாழ்வு போதும்
    உனை தேடும் பொழுது உள்ளத்தில் இனிக்கும்
    உயர்வோனை தேடி தினமுள்ளம் துடிக்கும்
    உலக ளந்த மாயவா எனுளம் நிரப்ப ஒடிவா

3)  நான்செய்த பாவம் கலிசெய்த சாபம்
    நான்மறைக்கும் தலைவா அதைமாற்றி தரவா
    கலிபெருகும் சமயம் கரைசேர்க்கும் இறைவா
    கருப்பொருளே வைகுண்டா ஆதி திருப்பொருளே மெய்குண்டா

4)  நீர்பட்ட துயர்கள் எனக்கான அடிகள்
    நிறைந்தாடும் பதிகள் நீர்சொன்ன விதிகள்
    கலிமாற்றும் அருள்கள் கரைசேர்க்கும் வழிகள்
    புதுபுத்தி தருவாய்அய்யா எமைகாத்து அருள்வாய் அய்யா!

                 ~~~~~~அய்யா உண்டு!~~~~~~~

எழுதியவர்:Admistrator,www.anbukodi.co.cc

2 comments:

thulasiraman said...

supeeeeeer

Anonymous said...

Valrha Ayyavin Anbukodi Tharmam.

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter