வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon என் கண்முன்னே அய்யா நிகழ்த்திய அற்புதம்!

"சொந்தகிளை நானுனக்கு சோறுதர வந்தேனடா!"

அய்யா உண்டு

அன்பான அய்யாவழி அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்.அய்யாவின் அற்புதங்கள் என்ற பகுதியில் என் கண் முன்னே அய்யா வைகுண்டர் நிகழ்த்திகாட்டிய ஒரு அற்புதத்தை இங்கு எழுதுகிறேன்.இந்த அற்புதம் நிகழ்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் இதை எழுத தொடங்கி விட்டேன்.இரவு பத்து மணி இருக்கும் நான் என் வீட்டில் நெட்டில் உலாவிக்
கொண்டிருந்தேன். திடீரென வெளியே யாரோ கதறி அழும் சத்தம் கேட்டது.அதைக் கேட்டு அதிர்ந்து விட்ட நானும்,அதைக் கேட்ட பிறரும் என்னவென்று காண வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர்.

என்னவென்று பார்த்த போது பக்கத்து வீட்டில் எனது பெரியப்பா மகன்.அவன் திடீரென கீழே விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான்.அவனது மனைவி மற்றும் அக்காள்,அம்மா அனைவரும் கதறி அழுது கொண்டு இருந்தனர்.அவர்கள் அய்யாவழிகாரர்கள் தான். அய்யாவின் தாங்கல் முன் தான் அவர்கள் வீடுமுள்ளது.எந்தவித நோயும் இல்லாதவன் திடீரென முடங்கியது அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.அவனை அந்த நிலைமையில் பார்த்த நான்,அவன் என்ன தவறு செய்தானோ தெரியாது,ஆனால் நாம் செய்த தவறுக்கு என்ன தண்டனையோ என அய்யாவை நினைத்துக் கொண்டேண்.அதற்க்குள் மருத்துவமனைக்கு செல்ல எற்பாடு செய்து விட்டனர்.

அவனுடய வீட்டார்கள் அனைவரும் அய்யாவை வேண்டி அழுதபடி முறையிட்டனர்.அவர்களின் குடும்பத்தில் முந்தய நாளில்தான் ஒரு இறப்பு நிகழ்ந்திருந்தது,ஆகவே இச்சம்பவம் அனைவரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது.அவனுடைய அக்கா தாங்கலின் முன்னே உள்ள அரசமரத்தில் தன் தலையை முட்டி அழுதது மனதை சிலிர்க்க வைத்தது.அவள் தாங்கலின் உள்ளே சென்று அய்யாவை வேண்டி சிறிது திரு நாமத்தை எடுத்து வந்து அவனுக்கு நெற்றியிலும்,மார்பிலும் பூசீனாள்.அதன் பின் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் ஆட்டோ திரும்பி வந்து விட்டது.அதற்க்குமுன் மருத்துவரை ஒருவர் தனது பைக்கில் அழைத்து வந்து விட்டார்.அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த சந்தோசத்தை அய்யா நிகழ்த்தி காட்டினார்.ஆட்டோவில் தூக்கி கொண்டு வைக்கப் பட்டவன், உள்ளிருந்து சிரித்துக்கோண்டே வேளியே வந்தான்.திரு நாமம் இடப்பட்ட மூன்றே நிமிடத்தில் இவைகள் நிகழ்ந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.அழைத்து சென்றவர்களை விசாரித்தோம் ஆட்டோவில் முடங்கி இருந்தவன் திடீரென என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என கேட்டுள்ளான்.அவனுக்கு நோய் குணமானதை உணர்ந்ததன்பின் அவனை திருப்பி அழைத்து வந்துள்ளனர்.

வாயுக் கோளாரினால் பாதிக்க பட்டுள்ளான் எனக் கூறினார்கள்.அவனை பாதித்தது எந்த கோளாறோ தெரியாது, நாமம் இட்ட மூன்றே நிமிடத்தில் அவனை குணபடுத்தி சிரிக்க வைத்தார் அய்யா.அய்யாவின் திரு நாம மகிமையை நேரில் கண்டு அதிசயித்தேன். அய்யாஉண்டு!

1 comments:

சிவகுமார் சிவசுப்பிரமணியன் said...

ayya undu

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter