வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
வைகுண்டர் வென்ற சோதனைகள் பகுதி-2
Wednesday, February 16, 2011 |
Posted by
ANBUKODI |
Edit Post
டாணா புழுக்குழி சோதனை:
விசத்தை உண்ட வைகுண்டர் மாளாமல் இருப்பதை உணர்ந்த சறடன்,வைகுண்டரை மேலும் ஒரு சோதனை செய்ய எண்ணினான்.அதன் படி வைகுண்டரை கொடிய டாணா சிறையில் வைக்க சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.மிகவும் துர்னாற்றம் வீசக்கூடிய அந்த சிறையில் வைகுண்டர் சற்று அதிகமான கொடுமைகளை தாங்கி கொண்டார்.மனிதர்களின் கழிவுகளும்,மிருகங்களின் கழிவுகளுமே அங்கு மிகுதியாக காணப்பட்டன.
பல்வேறு விஷ பூச்சிகளும்,அட்டைகளும்,பல்வேறு வகையான புழுக்களும் கொட்டிக் கிடந்தன.பெரும்பாலான பூச்சிகளும்,புழுக்களும் அய்யாவின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன.கொடிய நரகத்தை போன்ற அக்குழியில் வைகுண்டர் தனக்கு நேர்ந்த அனைத்து சோதனைகளையும்,சான்றோருக்காய் பொருத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.
வைகுண்டரின் அமைதியை கண்ட நீசமன்னன் அவரை மேலும் பல்வேறு சோதனைகள் செய்ய திருவனந்தபுரம் சிங்காரதோப்பு சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டான்.அதன்படி வைகுண்டர் டாணா சிறையிலிருந்து கோட்டாறு, தக்கலை வழியே இழுத்து செல்லப்பட்டார்.வைகுண்டரை நம்பாத மக்களெல்லாம் அவரை கட்டிகளைக் கொண்டு எரிந்து கண்டவிதமாக பேசி தீர்த்தனர்.வைகுண்டரை நம்பி வாழ்ந்த சான்றோர்கள் அவர் தங்களுக்காக படும் பாட்டை எண்ணி வருந்தி அழுதனர்.
கடுவாய் சோதனை:
வைகுண்டரை மேலும் சோதிக்க எண்ணிய சறடன் மன்னனின் யோசனைப் படி கடுவாய்க் கூண்டு ஒன்றில் வைகுண்டரை அடைத்து அவரை கடுவாய்க்கு இரையாக்க எண்ணினான்.அதன்படியே தனது சேவகர்களுக்கு ஒரு கடுவாயை பிடித்து வர உத்தரவிட்டான்.நாள் முழுவதும் கடுவாயை தேடிய படை வீரர்களுக்கு ஒரு கடுவாய் கூட கண்ணில் படவில்லை.இதனை சறடனிடமுறைக்க கோபங்கொண்ட சறடன் இன்று ஏழு மணிக்குள் கடுவாயை கொண்டு வராவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என் எச்சரித்தான்.பயங்கொண்ட வீரர்கள் வைகுண்டரை அணுகி அவரிடம் தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.உடனே வைகுண்டர் இந்தமுறை கடுவாய் கிடைக்கும் என கூறி அனுப்பினார்.அதன்படியே ஒரு கடுவாய் கிடைத்தது.அதனை மூன்று நாட்கள் பட்டினி போட்டு பின்னர் வைகுண்டரையும் ,கொடிய கடுவாயையும் ஒரே கூண்டில் அடைத்தனர்.
வைகுண்டர் கூண்டில் இருப்பதை உணர்ந்த கடுவாய் அவரை தாக்காமல்,மாறாக அவரை சரணடைந்து அமைதியாக இருந்தது.சேவகர்கள் கடுவாயை துன்பப்படுத்தியும் அது வைகுண்டருக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்கவில்லை.இவ்வாறாக கடுவாய் சோதனையை வைகுண்டர் வெற்றிக்கொண்டார்.மேலும் பல்வேறு சோதனைகளை வென்றதாக வைகுண்டர் அருள்னூலில் கூறியுள்ளார்.அதன்படி தீயில் எறிக்கப் பட்டும்,வத்தல் அறையில் வைத்து கொளுத்தப் பட்டும்,சுண்ணாம்புகல்லில் நீத்தபட்டும் வைகுண்டர் பாதிப்பின்றி திரும்பி வந்தார்.அதன் பின்னர் சுமார் 120 நாட்கள் சிங்கார தோப்பு சிறையை வென்று தான் நிச்சயித்த ஒரு நாளில் தெற்றணம் திரும்பினார்.
அய்யா உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
1 comments:
Santorukaga manil vantha vaikundamea Um patham panivom Ennalumea
Post a Comment