வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அகிலத்திரட்டு கதை சுருக்கம்(நெடியயுகம்)-பகுதி 2


தேவர்களின் வேண்டுகோள்: 
  
          சதிரயுகத்தில் குண்டோமசாலி மாண்டவுடன் ,சிவபெருமான் பிரளயத்தால் உலகத்தை அழித்தார்.அதன் பின் அடுத்த யுகம் படைப்பதற்கான ஆலோசனை நடந்தது.அப்போது தேவர்கள் கூடி சிவனிடம் ,இறைவா இதற்கு முன் தாங்கள் படைத்த குறோனியின் இரண்டு படைப்புகளும்,சிந்திக்கும் திறனற்ற மிருகத்தை போல பிறந்தன.ஆனால் இனி தாங்கள் படைக்கும் படைப்பிற்க்கு சிந்திக்கும் ஆற்றலும்,மேலும் பல அரிய வரங்களும் கொடுத்து பல சிறப்புகளையும் கொடுத்து படைக்க வேண்டும் என்று கூறினர்.

தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பிறப்பு:

        இவ்வாறாக தேவர்கள் கூற சிவனாரும் மகிழ்ந்து ,பழைய குறோணியின் மீதமுள்ள ஐந்து துண்டுகளில் ஒன்றை எடுத்து.அதை இரண்டாக பிரித்து இரண்டு அசுரர்களை படைத்தார்.படைத்து அந்த யுகத்தை நெடியயுகம் என வகுத்தார்.பின்னர் பிறந்த அசுரர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிவனிடம்,மாயவர் கேட்க சிவபெருமான் இவனுக்கு பெயர் வைக்க வேணுமென்றால் அதற்க்கு முன் இவனுக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று சொல்லி,அவர்கள் இருவரையும் கைலையில் தவம் செய்யும் சுருதிமுனியின் தவத்தை அழிக்க சொன்னார் ஈசன்.நூறு கால்களையும்,ஐம்பது தலைகளையும்,நூறு கண்களையும் உடையவர்களான அவ்விரு அசுரர்களும் சுருதி முனியை தேடி சென்றனர்.

     கைலையில் தவம் செய்த சுருதி முனியைக் கண்ட அசுரர்கள் அவரின் தவத்தை அழித்து அவரை தூக்கி கடலில் எரிந்தனர்.கோபம் கொண்ட மாமுனிவர் "என் தவத்தை கலைத்து கடலதிலே போட்டாலும் மாயனடிசேர்ந்து அம்பாய் உருவெடுத்து உங்கள் சீமையை நெருப்பால் அழித்து உங்கள் சிரசை அருத்து வைகுண்டம் அடைவேன்" என சாபமிட்டு கடலில் விழுந்து அம்பாய் மாறி கிடந்தார்.

அசுரர்களின் கொடுமைகள்:

         சுருதிமுனியின் தவத்தை கலைத்து விட்டு வந்த அசுரர்கள் ஈசனைக் காண வெற்றிக் களிப்பில் வந்தனர்.வந்தவர்களிடம் ஈசன் என்ன வரம் வேணுமென்றுரைக்க,  இந்த பூமியில் உள்ள அஷ்த்திரங்களாலும்,வாளாலும்,வானம்,பூமி,மலையில் வாழ்பவராலும் அழிவு நேர கூடாது என்றும் மேலும் வானோர்களெல்லாம் எனக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனவும் வரங்களை கேட்டு பெற்றுக் கொண்டார்கள்.

           அவ்வாறு பல வரங்களை பெற்றுக் கொண்ட கொடிய அரக்கர்கள் இருவரும் வானுலக தேவர்களை தங்கள் அடிமைளாக்கி கொடுமைகள் பல செய்து ஆண்டு வந்தனர்.கொடிய அசுரர்கள் பூவுலகில் பெரிய கோட்டைகளைக் கட்டி அரசாண்டு வந்தனர்.அவர்களுக்கு துணையாக குறோணியின் உதிரத்திலிருந்து அசுரப் படைகள் அவர்களுடன் பிறவி செய்யப்பட்டனர்.இவ்வாறாக வாழ்ந்த கொடிய அசுரர்கள் தாந்தாம் பெரிதென்று எண்ணி பல தவறுகளையும்,கொடுமைகளையும் தேவர்களுக்கும்,இறைவனுக்கும் எதிராக செய்து வந்தனர்.அசுரர்களின் அழிவு நெருங்க தேவர்கள் கொடுமை தாங்காது சிவனிடம் முறையிட்டனர்.

சிவனார் யோசித்தலும் உமையாள் பதிலும்:

            தேவர்களின் குறைகளை தீர்ப்போம் எனக் கூறிய சிவன்,பூமியில் உள்ள மனிதர்களின் அஸ்த்திரத்தாலும்,வானில் உள்ள விமலரின் அஸ்த்திரத்தாலும்,மலையிலே வாழும் முனிவரின் அஸ்த்திரத்தாலும் அழியா வரம் பெற்ற இவர்களை எவ்வாறு அழிப்பது"என உமையாளிடம் ஈசன் கேட்க அதற்கு அன்னையானவள் வழியொன்று உண்டு என கூறி,சுருதிமுனியின் சாபத்தை பற்றி கூறினாள்.மகிழ்ந்த சிவனும் உடனே மாயவரை அழைத்து விவரமெல்லாம் உரைத்தார்.

அசுரர்களின் அழிவும் நெடிய யுகத்தின் முடிவும்:

         நாராயணரும் பகைமுடிக்கும் நேரமிது என மகிழ்ந்து ,அலைகடலில் தவமாய்க் கிடந்த கணையை எடுத்து,அதிக கோபம் கொண்டு எய்திடவே கணையானது அவ்விரு அசுரர்களின் கோட்டையையும்,அவர்களின் ஊரானதையும் எரித்து அவர்களின் தலையை அருத்து எரிந்து ,கடலில் நீராடி நாரயணர் பாதம் சேர்ந்தது.அவ்வாறு சேர்ந்த சுருதி முனியாகிய கணையானது புகழ் மிக்க வைகுண்ட பேறு கேட்க மாயவரும் மகிழ்ந்து வைகுண்ட பேறு கொடுத்தார்.இவ்வாறாக நெடியயுகம் முடிவு பெற்றது.  
                                                                   அய்யா உண்டு!
                                                                                                                          தொடரும்....................

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter