வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
அழிவுகள் விபரம்
Wednesday, September 29, 2010 |
Posted by
ANBUKODI |
Edit Post
அழிவுகள் விபரம்
அய்யா வைகுண்டர் கலி முடியும் காலத்தில் நடக்கும் உலக நிகழ்வுகளை அகிலத்திரட்டு,அருள்நூலில் கூறியுள்ளார்.
பிவரும் வரிகளை காண்போம்,
" பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு
பேய்மாராட்டத்தால் அழிவு
பெருஞ்சுரத்தால் அழிவு
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைபட்டளிவு
பெண்ணாலே ஆணழிவு
ஆணாலே பெண்ணழிவு "
மேற்கண்ட வரிகள் அருள்நூலில் அதிகார பத்திரத்தில் உள்ளவை ஆகும்.
இன்றைய உலகின் நடப்புகளுக்கும், இவ்வரிகளுக்கும் உள்ள ஒற்றுமையை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை .
ஆம் அனைத்தும் அய்யாவின் வாக்குப்படியே நடந்த உண்மைகளாகும், பெரும் காற்றினால் எத்தனையோ முறை உலகில் அழிவு ஏற்பட்டுள்ளது, அதுபோல மழையாலும்,வெள்ளத்தாலும் ஏற்படாத பதிப்புகளே இல்லை எனலாம்.
இன்றைய உலகில் மக்கள் பல செய்ய தகாத செயல்களை செய்து பின் அதற்காக மனம் வருந்தி விஷமருந்தி சாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதற்கும் மேலாக காமம், பணம்,போன்றவற்றின் மேலுள்ள ஆசைகளாலும்
தங்களுக்குள்ளே கொலை செய்து சாகும் நிகழ்வுகளும்,ஆண்களால் பெண்களும், பெண்களால் அண்களும் கொலை செய்யப்படுவது எளிதான செயலாகி விட்டது.இத்தனை கொடிய சம்பவங்களை முன்கூட்டியே வைகுண்டர் வகுத்ததை அருள் நூல் விளக்குகிறது.
பின்வரும் உதாரணங்கள் அய்யாவின் வாக்குகளுக்கு சான்றாக இருப்பதை காண்க .
அய்யா உண்டு
- 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்
டிசம்பர் 2004ல் சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா,மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் 225,000 பேர் உயிரிழந்தனர்.
அய்யா உண்டு
Labels:
சொன்னது நடந்தது
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
1 comments:
பிவரும் வரிகளை காண்போம், எழுத்துப்பிழை தவறு நிறைய உள்ளன.
Post a Comment