வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon கலி என்றால் என்ன? அதை எப்படி அழிப்பது?

        

" கலி என்றால் எலி அல்லவே கணையாழி வேண்டமே "


கலியை பற்றி அகிலத்திரட்டு அம்மானை
"கலி என்றால் எலி அல்லவே கணையாழி வேண்டாமே
வலி மாய நினைவு மாய்மாலம் என்மகனே
ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே"

என்று கூறுகின்ற இப்பாடலில் கலி என்பது "வலி மாய நினைவு மாய்மாலம்"என்று வரையறை கூறுவதை பாருங்கள்.
அதாவது, வலிமை பொருந்திய மாயதன்மையுள்ளதும், நினைவுகளினால் உருவாகின்றதும்   ஆகிய தீய சக்தி ஆகும்.இங்கு மாலம் என்னும் சொல் பேய் என்னும் பொருளைக் கொடுத்துத் தீய சக்தியைக் குறிப்பிட்டு நிற்கிறது.மாய்ந்து போகக் கூடிய வலிமை பொருந்திய இந்த தீய சக்தியை அத்வைத தத்துவம் மாயை என்கிறது.இந்த மாயை எப்படி உருவாகிறது?
     நம் என்ன அலைகள், நினைவுகள் தான் இந்த மாய விளையாட்டுக்கு காரணம் ஆகும். அவை எங்கிருந்து தோன்றுகின்றன?என்னும் கேள்வியை எப்போதும்   எழுப்பிக் கொண்டிருந்தால் மாயை  தோன்றாது. எதை என்னுவோமோ அது ஆவோம். எனவே மாயை ஆய்வு இல்லாத நமது நினைவின் உள்ளிருந்து தோன்றுகிறது.
       பேய் ஒன்று இருப்பதாக நினைத்தால் அவனை பொறுத்தவரை அவனுக்கு பேய் உண்டு. அது அவனது ஆய்வு இல்லாத நினைவினால் உண்டானது.நோவு உண்டு என நினைத்தால் அவனுக்கு நோவு உண்டு.அது அவன் நினைவினால் உண்டானது .
இதுபோல எதை மனதில் உருவாக்குகிறானோ அதுமயமாகின்றான் மனிதன்.நாம் காண்பது ,நினைப்பது எல்லாம் உண்மையில் இல்லாதது ஆகும்.அது மாயையின் மாய்மாலம் ஆகும்.
     அப்படியானால் எது உண்மையான பொருள்?அதுவே பரம்பொருள்.அது,நினைவுக்கும்,வாக்குக்கும்,அறிவுக்கும் எட்டாத பொருள் ஆகும்.அதை மனிதன் எட்டும் போது பரம்பொருளில் ஐக்கியமாகின்றான்.

இதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது..
"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொம்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவால் என்றார்" 
 
   இதன் பொருள் உலகில் வாழும் மக்களே ,பொய்,பிசாசு,பில்லிவினை,நோய்,நோவு,நொம்பலம்,தொய்வு,இறைகள்(இங்கு பரம்பொருளை குறிப்பிடவில்லை). இவுலகம், குற்றம் இவைகள் எல்லாம் மாயைகளாகும்  .இவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட எண்ணங்களாகும்.
            இறைவன் இல்லை என்ற வாக்கியத்தை கண்டு அதிர வேண்டாம்.இதன் அர்த்தம் மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட இறைவன் கூட மாயையே ஆகும்.இதையும் தாண்டி அடைவதே மாயை அற்ற பரம்பொருள்.




0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter