வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யாவகுத்த 32 அறங்கள்.

அய்யா உண்டு

         அன்பான அய்யாவழி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்,இங்கு நாம் அய்யா தனது அன்புக்கொடி மக்களுக்காக வகுத்த 32 அறங்களை காண்போம்,

   1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
   2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
   3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
   4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
   5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
   6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
   7.திண்பண்டம் நல்கல்.
   8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
   9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
  10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
  11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
  12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.
  13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
  14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
  15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
  16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
  17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
  18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
  19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.
  20.பிறர் துன்பம் தீர்ப்பது.
  21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
  22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
  23.சாலைகள் அமைத்து கொடுப்பது.
  24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.
  25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.
  26.மிருகங்களுக்கு உணவளிப்பது.
  27.சுமைதாங்கி நிறுவுதல்.
  28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
  29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
  30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.
  31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
  32.வஸ்த்திர தானம் செய்தல்.

இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.
அய்யா உண்டு!

1 comments:

Anbukodi Makkal said...

AYYA UNDU AYYA UNDU AYYA UNDU AYYA UNDU
AYYA UNDU AYYA UNDU AYYA UNDU AYYA UNDU
AYYA UNDU AYYA UNDU AYYA UNDU AYYA UNDU

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter