வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
வைகுண்டரின் எகனை திருமணங்கள்
Tuesday, January 04, 2011 |
Posted by
ANBUKODI |
Edit Post
அன்பான அன்புகொடி மக்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.இங்கு நாம் அய்யா வைகுண்டர் இந்த கலியுகத்தில் செய்த பல்வேறு எகனை திருமணங்கள் பற்றியும் அதன் காரண காரியங்கள் பற்றியும் காண்போம்.வைகுண்டர் தன் அவதார வாழ்வின் போது ஏழு கன்னியர்களான மரகதம்,வல்லி,வள்ளி,சலிகை,சரகதகன்னி,சரிதை,அரிமடவை போன்றவரையும் மேலும் பார்வதி,பகவதி,மண்டைக்காட்டாள்,உமையாள்,வள்ளி,தெய்வானை,பூமடந்தை போன்ற தெய்வ மாதர்களையும் எகனை திருமணம் புரிந்தார்.எகனை என்பதற்க்கு முன்விதிப்படி என்று பொருள்.எனவே வைகுண்டர் புரிந்த திருமணங்கள் யாவும் முன்விதிப்படியே நடந்தவை ஆகும்.
கலியுகம் தோன்றியதும் தனது கிருஷ்ண அவதாரத்தை முடித்து விட்டு வரும் வேளையில் ஏழு கன்னியரிடம் திருவிளையாடல் புரிந்து சான்றோரை பிறக்க செய்து விட்டு மறைந்தார்.கற்பையிழந்த கன்னியர்கள் தங்களை மணம்புரிய வேண்டி மாயவரை நோக்கி தவம் செய்தனர்.அப்பொழுது திருமால் தோன்றி கலியுகத்தின் முடிவில் உங்களை மணம் புரிவதாக வாக்களித்து விட்டு மறைந்தார்.அதன்படியே கலியுகத்தின் முடிவில் நாரயணர் வைகுண்டராக தோன்றி ஏழு கன்னியர்களையும் எகனை திருமணம் புரிந்தார்.
ஒவ்வொரு யுகத்தினையும் முடிக்க சிவன் திரு நடனம் ஒன்றை புரிவார்.அவ்வாறு திருனடனம் புரிந்தால் அனைத்து மேலோகத்தாரும் பூமியில் பிறந்து வாழ்வது விதியாகும்.இதனை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது,
"தாண்டவம் ஆடிப் புரிந்தால் சத்தி சிவம் வரையும்,மாண்டாரைப்
போல் கிடந்து மறுத்து எழும்ப வேணுமல்லோ"
அதன்படியே பூமியில் பிறக்கும் வைகுண்டர் பல தெய்வ மாதர்களை மானிட கூட்டில் வரவழைத்து அவரவரின் கனவர்களாய் இருந்து எகனை திருமணம் புரிந்தார்.அடுத்ததாக பானாசுரனை அளிக்க பிறந்த சத்தியானவள், கன்னியாக இருந்து பகவதி எனும் பெயரில் சிவனை நோக்கி தவம் புரிந்தாள்.அவளையும் வைகுண்டர் கலியுக முடிவின் போது சிவமாக இருந்து மணம் புரிந்தார்.இவ்வாறாக கலியுகம் முடியும் முன்னரே பல்வேறு தெய்வ சக்திகளை தன்னுள் அடக்கி அனைத்தும் பரம்பொருளில் அடக்கம் என உலக மக்களை அறிய செய்தார்.
அய்யா உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
0 comments:
Post a Comment