வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
நம் அன்றாட கடமைகள்
Thursday, October 21, 2010 |
Posted by
ANBUKODI |
Edit Post
அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடமைகள் சிலஇங்கே...........
- அதிகாலையில் துயிலெழுதல்.
- விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி,குளித்து விட்டு ,நெற்றியில் திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
- சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் படித்து விட்டு பின்,பள்ளி,கல்லூரி பாடங்களை படிக்க வேண்டும்.
- தாய்,தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
- நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து பெற்றோருக்கு உதவ வேண்டும்.
- நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும்.
- கடமை தவறாமையும் ,காலந்தவறாமையும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
- நாம் வசிக்கும் இடம்,படுக்கும் இடம்,படிக்கும் இடம் அனைத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
- எல்லோரிடமும் அன்பாக நடந்திட வேண்டும்.
- ஒருபோதும் கோபங்கொள்ள கூடாது, கோள்வார்த்தைகள் பேசக்கூடாது,கேட்க கூடாது.
- நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
- பதிகள் மற்றும்,தாங்கல்களில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பிறருடைய நலனுக்காக அய்யாவிடம் வேண்டுதல் வேண்டும்.
- நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
- நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்,உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
- அன்பு,தர்மம்,பொறுமை இவற்றைக் கடைபிடித்து வாழ்வின் வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அய்யா உண்டு
Labels:
நம் அன்றாட கடமைகள்
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
1 comments:
அய்யா உண்டு
Post a Comment