வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அன்பு என்னும் கோட்டைக் கட்டி அரசாட்சி செய்பவரே ....



அன்பு என்னும் கோட்டைக் கட்டி அரசாட்சி செய்பவரே
வம்பு கலி வேரறுக்க வையமதில் வந்தவரே
அருள் வேண்டி பாடுகின்றேன்
உம் அடி வேண்டி தேடுகின்றேன்
அய்யா உம் அடி வேண்டி தேடுகின்றேன்

மண்ணிலுள்ள தெய்வமெல்லாம் மண்சிலையாய் நின்றதைய்யா
மக்கள் பட்ட இன்னல்களை மாற்றி தரவில்லையய்யா
ஆண்டி வேடம் பூண்டு வந்தாய்
அடிகள் பட்டும் பொறுமை கொண்டாய்
எனக்காய் அடிகள் பட்டும் பொறுமை கொண்டாய்

பாவிநீச கலியனெல்லாம் பரம்பொருளை அறியவில்லை
பரிட்சைகள் பலவைத்தும் மாயவரை மதிக்கவில்லை
சாதித்து நின்றாய் அய்யா
போதித்து வென்றாய் அய்யா
கலிக்கு போதித்து வென்றாய் அய்யா

சாதியாலே ஒதுக்கப்பட்ட சான்றோரை காத்து நின்றாய்
ஆதிகுருவாக நின்று அன்பினாலே அரவணைத்தாய்
அன்புவழி தந்தாய் அய்யா
அகிலமாள வைப்பாய் அய்யா
சான்றோரை அகிலமாள வைப்பாய் அய்யா

                ~~~~~~அய்யா உண்டு~~~~~~~~

எழுதியவர்:Administrator,www.anbukodi.co.cc

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter